மதுரை, பிப்.1- மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டி யிடும் வார்டுகள் தொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகராட்சியில் போட்டி யிடும் இடங்கள் தொடர்பாக திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே யான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிப்ரவரி 1 செவ்வா யன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 23, 58, 63, 80, 83, 86, 88, 96 ஆகிய 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையில் திமுக நிர்வாகிகள் பொன். முத்துராமலிங்கம், வி. வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, முன்னாள் மேயர் பெ. குழந்தை வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநிலக்குழு உறுப் பினர்கள் சி. ராமகிருஷ்ணன், இரா. விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.