tamilnadu

img

படுகாயமடைந்த இறைச்சி வாகன ஓட்டுநர், உதவியாளருக்கு சிபிஎம் ஆறுதல்

படுகாயமடைந்த இறைச்சி வாகன  ஓட்டுநர், உதவியாளருக்கு சிபிஎம் ஆறுதல்

இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

கடந்த வாரம் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் “பசுக் காவ லர்கள்” என அழைத்துக் கொள்ளும், பாஜக - ஆர்எஸ்எஸ் இந்துத்துவா குண்டர்கள் இறைச்சியை ஏற்றிச் சென்ற லாரியை வழி மறித்து, ரூ.50,000 கேட்டு தாக்கியுள்ளனர். இந்த  தாக்குதலில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டு நர், உதவியாளர் இருவரும் அலிகார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலக் குழு சார்பில் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு அலிகா ருக்குச் சென்று சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு  மேற்கொண்டது. அதன்பின்னர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வர்களை சந்தித்து ஆறுதல் கூறியது. சிகிச்சை பெற்று வரும் 2 பேரின் குடும்பத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக சிபிஎம் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற உத்தரப்பிரதேச மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சுரேந்திர சிங், சந்திரபால் சிங் மற்றும் அலிகார் மாவட்டச் செய லாளர் இத்ரிஸ் ஆகியோர் உறுதி அளித்தனர்.