சென்னை, ஆக.16- 2023 ஆம் ஆண்டுக்கான நல்ஆளுமை விருது பெற்றுள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனை முதல்வர் தேரணி ராஜனை சந்தித்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜ சேகரன், இரா. சிந்தன் ஆகியோர் உடனிருந்தனர். கைவிடப்பட்ட நோயாளி களுக்காக அவர் உருவாக் கிய சிகிச்சை பிரிவு தனித்து வமான முயற்சி, மனித உயர் மாண்பின் வெளிப் பாடு. இந்த சிகிச்சை பிரிவில் இதுவரை 450 பேர் குண மடைந்துள்ளனர். இதில் சுமார் 100 பேர் குடும் பங்களோடு மீண்டும் இணைந்துள்ளார்கள் என்பது நெகிழ்வான செய்தி. இதுபோன்ற முயற்சிகள் மருத்துவ சேவைக்கு பெருமை சேர்க்கின்றன. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.