tamilnadu

img

கோவாவில் 37ஆவது தேசிய களரிப்பயட்டு

உடுமலை, நவ. 3 - தேசிய அளவிலான 37ஆவது களரிப்பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கோவாவில் நடை பெறுகிறது. இதில் இந்திய களரிப்பயட்டு கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கத்தின் சார்பில் மடத்துக்குளம் ‘பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை’யைச் சேர்ந்த எட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கோவாவில் நடைபெறும் இந்த தேசியப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.  இந்நிலையில், களரிப்பயட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் களுக்கான ஆலோசனை கூட்டம் உடு மலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்ட ளை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வு க்கு தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கத்தின் செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஆர்.எஸ்.செல்வராஜ், விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, பணி நிறைவு நூலகர் கணேசன், ஜிவிஜி காசாளர் சங்கர மகாதேவன் ஆகியோர் பங்கேற்று களரிப்பயட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  உடுமலை, மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வீ.ஜீவா, கே.ருத்ரேந்தர், டி.விக்னேஸ்வரன், எம்.முத்துச்செல்வம், வி.தரன், எம்.விக்னேஷ், ஆர்.ராமச்சந்தி ரன், கே.விசாலி ஆகிய எட்டு பேர் தமிழக அணியாக பங்கேற்கும்  நிலையில் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் பாராட்டி, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார். போட்டி குறித்து, தமிழ்நாடு களரிப்ப யட்டு சங்கத்தின் மாநில செயலாளர் ஆசான் வீரமணி பேட்டியளித்தார். “ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ளும் 18 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் தேர்வு கோவா வில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்  வீராங்கனைகள் கலந்து கொள்கின்ற னர். அதில் முதல்முறையாக களரிப்பயட்டு  சேர்க்கப்பட்டுள்ளது. களரிப்பயட்டில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். சுவடு, மெய்பயட்டு, உருமி வீசல், சவுட்டி பொங்கல், கைப்போர்,  கேட்டுக்கரி, வாளும் பரிச்சா  ஆகிய ஏழு  வகை பிரிவுகளில நடைபெறும் போட்டி களில் இவர்கள் பங்கேற்கின்றனர்” என்று தெரிவித்தார்.