tamilnadu

img

வெற்றி முனைப்புடன் சிபிஎம் வேட்பாளர்

நாகர்கோவில், ஜூலை 8 கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 உள்ளாட்சி பதவிக ளுக்கு சனியன்று வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.  வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முகக்கவசம் அணிந்து வருவ துடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வருமாறு தேர்தல் நிர்வாக குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.    கன்னியாகுமரி மாவட்டம் இராஜாங்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 வது வார்டு உறுப்பினர் இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெற்றி முனைப்புடன் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின் னத்தில் சிபிஎம் வேட்பாளர் ஆர். லதா போட்டியிடுகிறார்.  ஜூலை 7 வியாழனன்று பிற்பகல் 3 மணிக்கு சியோன் புரம் சர்ச் முன்பிருந்து திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என். எஸ் கண்ணன், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் மற்றும் முன்னாள் எம் எல் ஏ ஆஸ்டின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.