tamilnadu

ஆளுநர் தேநீர் விருந்து சிபிஎம் புறக்கணிப்பு

ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தை புறக்க ணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்  துள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டிற் கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகங்களை இழைத்து வருவதுடன், தான் ஏற்றுக் கொண்ட மதவெறி கருத்துக்  களை கூச்சநாச்சமின்றி தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவி பொதுவெளியில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நீடிக்கின்ற வகை யில் ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்யும்  எந்த விருந்திலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கலந்து கொள்வதில்லை எனவும், அவற்றை புறக்கணிப்பது என வும் முடிவு செய்துள்ளது’’ எனக் கூறி யுள்ளார்.