வீட்டுமனைப் பட்டா கேட்டு சிபிஎம் முறையீடு
சேலம் மாவட்டத்தில், வீடற்ற மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சேலத்தில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. நான்கு மையங்களில் நடைபெற்ற இவ்வியக்கத்தில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. நாகை மாலி, எம். சின்னத்துரை, மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, ஏ. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.