tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு “செங்கொடிதினம்” கடைப்பிடிப்பு

தலச்சேரி, ஏப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு கண்ணூரில் ஏப்.6-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி “செங்கொடி தினம்” கடைப்பிடிக்கப்பட்டது. 23-ஆவது அகில இந்திய மாநாட்டைக் குறிக்கும் வகையில் தலச்சேரி முதல் கண்ணூரில் உள்ள  ஏகேஜி சிலை வரை 23 கிலோமீட்டர் தூரம் செங்கொடியைத் தாங்கிய மனிதச் சங்கிலி நடைபெற்றது. தலச்சேரி ஜவஹர் மைதானத்தில் பிரிட்டிஷ் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் தியாகிகளான அபு மாஸ்டர் மற்றும் சாத்துக்குட்டி ஆகியோரின் நினைவாக செங்கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்வில் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். கண்ணூரில்  மத்தியக் குழு உறுப்பினர்கள் இ.பி. ஜெயராஜன், எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், கரிவெள்ளூர் தியாகிகள் நினைவிடம் தொடங்கி, மாஹே பூழித்தலத்தில் உள்ள செருகலை தியாகிகள் நினைவிடம் வரை, 53 முக்கிய மையங்களில், 150 மீட்டர் நீளமுள்ள கொடிகளுடன் மனிதச் சங்கிலி நடைபெற்றது.