நகைக் கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் நிறுத்தி வைப்பு சிபிஎம், வெகுஜன இயக்கங்களின் போராட்டம் வெற்றி
சென்னை, மே 31 - நகைக் கடன் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த, சாதாரண ஏழை-எளிய மக்களின் குரல் வளையை நெறிக்கும் புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, நிபந்தனைகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய வாலி பர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகளும், ரிசர்வ் வங்கியின் இந்த நிபந்த னைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஜூன் 3 அன்று சென்னை ரிசர்வ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஜூன் 5 ஆம் தேதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் ரூ.2 லட்சம் ரூபாய் வரை தங்க நகைக் கடன் பெறு வதற்கு நிபந்தனை இல்லை என்றும், இதர நிபந்தனைகள் அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என்றும், அதற்கு முன்பு அனைவரிடமும் கருத்து கேட்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் பெறுவதற்கு அறி வித்த 9 புதிய நிபந்தனைகளை முழுமை யாக ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்பு களின் போராட்ட முன்னெடுப்புகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். எனவே, ஜூன் 3 அன்று விவசாயிகள் சங்கம் சார்பிலும், ஜூன் 5 அன்று மாதர் - வாலி பர் சங்கம் சார்பிலும் நடைபெற இருந்த ஆர்ப்பாட் டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலன்டினா, மாநிலச் செயலாளர் ராதிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.