tamilnadu

img

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்திற்கு உற்சாக வரவேற்பு

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்திற்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, ஜுன் 13-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, செம்பனார்கோவில்,சீர்காழி,  கொள்ளிடம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய ஒன்றியங்கள் முழுவதும் பிரச்சார இயக்கம் தீவிரமாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பளித்து பயணக் குழுவை உபசரித்து வருகின்றனர்.  துண்டு பிரசுரங்களை பெற்றுக்கொண்டு பல்வேறு பிரச்சனைகளை கூறுகின்றனர். 3 ஆவது நாளான வெள்ளியன்று செம்பனார்கோயில் ஒன்றியம் மேலபாதி கடைவீதியில் பிரச்சார இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ். துரைராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். தரங்கம்பாடி ஒன்றியம், துடரிப்பேட்டையில் பிரச்சார பயணத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றினார்.  மயிலாடுதுறை ஒன்றியம், கழுக்கானிமுட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் துவக்கி வைத்து உரையாற்றினார். மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.  திருச்சிராப்பள்ளி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.  தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தர பணி நியமனங்களை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் வேலாயுதம்பாளையம் காந்தி நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ப.சரவணன், கரூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அரவிந்த், நடராஜன், கிளை உறுப்பினர்கள் கிருஷ்ணன், நாகராஜ், மதியழகன், பழனியப்பன், குமரவேல், ராமகிருஷ்ணன், ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.