மக்கள் வாழ்வாதாரக் கோரிக்கைக்கான சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம்
ஒன்றிய பாஜக அரசின் மதவெறுப்பு மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்து நாள் கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், வடசென்னை மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், வட்டச் செயலாளர் என்.கங்காதரன், மூத்த தலைவர் கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்க மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.