சென்னை, ஜன.9- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (ஜன.9) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திலுள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகனின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, கொறாடா கோவி. செழியன், பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, சட்டமன்ற கட்சித் தவைர்கள் செல்வப் பெருந்தகை, நாகை மாலி, ராமச்சந்திரன், ஜவா`ஹிருல்லா, வேல்முருகன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.