சென்னை, பிப். 7 - கோவில் நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அனுமந்த ராய சுவாமி கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியோடு, சட்டவிரோதமாக குவாரிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்டு, கோவில்களின் செயல் பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் திங்களன்று (பிப்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது. மாவட்ட ஆட்சியர், ஆய்வு கூட்டம் நடத்தி, சட்டவிரோத குவாரிகளுக்கு கனிம வளத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவில்க ளுக்கு தானமாக வழங்கிய சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது கோவில் நிர்வாகத்தின் கடமை. சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறும் அதிகாரிகளை, அதற்கு பொறுப்பாக்க வேண்டும். கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை கொள்ளையடிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருப்பினும், அது போதுமானதல்ல. கோவில் சொத்துக்களை மீட்பதில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தனி குழு நியமித்து திறமையாகவும், விரைவாகவும் சொத்துக்கள் மீட்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகளவில் முறைகேடுகளை அனுமதித்து, அரசு துறை தனது கடமையை தவறியுள்ள தால், அரசுத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும். சொத்துக்களை மீட்பதுடன், வருவாய் இழப்பையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்ற மற்றும் சிவில் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும. இதில், அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறை கள், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், கண்காணிக் கவும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்