கோட்டயம், அக்.31- கேரளத்தில் கோட்டயம் மாவட்டம் வேலூ ரில் உள்ள கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட்டின் வணிக அடிப்படையிலான அச்சுக்காகித உற்பத்தியை நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் செவ்வாயன்று (நவ.1) துவக்கி வைக்கிறார். இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 320 டன் அச்சுக் காகிதமாகும். தேவையான மூலப்பொருட்களை வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காடுகளிலிருந்து பெறும் மூலப்பொருட்களுக்கான விலை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது. யூகலிப்டஸ், அக்வாசியா ஆரிகுலிஃ பார்மிஸ், அக்வாட்டியா மஞ்சியம், மூங்கில், நாணல் போன்றவை முதல் ஆண்டில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.500-க்கு வழங்கப் படும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள செய்தித்தாள்கள் அச்சிட இனி கேபிபிஎல் உற்பத்தி செய்யும் காகிதம் பயன் படுத்தப்படும். கேபிபிஎல், செய்தித்தாள்க ளுக்கு ஏற்ற 42-45 ஜிஎஸ்எம் (கிராம்/ சதுர மீட்டர்) அச்சுக் காகிதம் முழு அளவிலான உற்பத்தியை நோக்கி நகர்கிறது. இதன் மூலம் இறக்குமதி அச்சுக் காகிதத்தால், நாளி தழ் துறைக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஓரளவுக்கு தீரும். கேபிபிஎல் நிறுவனம் தற்போது 3,000 டன் கழிவு காகிதத்தை மறு சுழற்சிக்காக கையிருப்பில் வைத்துள்ளது.
அச்சுக் காகித உற்பத்திக்கு சிறந்த வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள பகுதி அல்ல. எனவே, வரும் காலகட்டங்களில் மதிப்பு கூட்டப்பட்ட காகிதப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் கேபிபிஎல் கவனம் செலுத்தும். இது நோட்புக் மற்றும் பிரிண்டிங் -புக் துறைகளில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் மற்றும் ஆர்ட் காகிதங்களையும் உருவாக்க முடியும்.
மூடப்பட்ட ஆலையின் மறுபிறவி
எச்என்எல் என்கிற பெயரில் செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனத்தை இலாபகர மாக இல்லை எனக்கூறி ஒன்றிய அரசு மூடி விட்டது. 500க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் குடும்பங்கள் தவித்தபோது கேரள அரசு உதவிகளை செய்து வந்தது. தொழிலாளர் களின் பணப்பயன்கள் உட்பட ரூ.146 கோடி யை வழங்கி நிறுவனத்தை கேரள அரசு கையகப்படுத்தியது. எச்என்எல் என்பதை கேபிபிஎல் என மாற்றி கடந்த மே மாதம் ஆலையை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்துவைத்தார். எச்என்எல் நிர்வாகத்தின் கீழ் பணி யாற்றிய 255 நிரந்தர தொழிலாளர்களுக்கு புதிய நிறுவனத்தில் வேலை வழங்கப் பட்டது. நடைமுறை மூலதனமான ரூ.75 கோடி உட்பட ரூ.154 கோடி கேபிபிஎல்-க்கு கேரள அரசு வழங்கியது. ஆண்டுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அச்சுக் காகிதம் உற்பத்தி செய்து ரூ.3,000 கோடி விற்று வரவுக்கு கேபிபிஎல் திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசு பின்பற்றி வரும் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றை முன்வைத்து கேரளம் செயல்படுவதன் மற்றுமொரு அடையாளமாக கேபிபிஎல் மாறியுள்ளது.