tamilnadu

img

கொரோனா... மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 4 பேர் குணமடைந்தனர்... 

மதுரை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிவப்பு மண்டலமான மதுரையில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மதுரையில் இதுவரை 79 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,மதுரை அரசு ராஜாஜி கொரானா சிறப்பு வார்டில் இன்று ஒரே நாளில் 4 பேர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் 4 பெரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 40 பேர் கொரோனா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;