tamilnadu

தமிழகத்தில் கொரோனா 776 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 7

மதுரை, மே 21- தமிழகத்தில் வியாழனன்று 776 பேருக்கு கொரோனா தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் களில் 567 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள்.  பாதிக்கப்பட்டவர்களில்  479 பேர் ஆண்கள். 297 பேர் பெண்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. வியாழனன்று 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண் ணிக்கை 6,282. வியாழனன்று ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 94-ஆக அதிக ரித்துள்ளது. கொரோனா இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5,315 பேர் தனிமை வார்டுகளில் உள்ளனர்.

வியாழனன்று 13,967 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இது வரை தமிழகத்தில் 3,55,893 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை யில் 19 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். மதுரை மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். சிவகங்கையில் இருவர், விருதுநக ரில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறந்த குழந்தை முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஆண்கள் 463 பேர். பெண்கள் 393.

;