tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,585 74 பேர் பலி

மதுரை, மே 16- தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. சனிக் கிழமை மட்டும் 477 பேர்.  பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 384 பேர். தவிர மகா ராஷ்டிரம், குஜராத், ஆந்திரா மாநிலங்க ளைச் சேர்ந்த  93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 மையங்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் உள்பட 939 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதை யடுத்து மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.  சனிக்கிழமை மட்டும் 10,535 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவியதிலிருந்து இதுவரை 3,13,639 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் 84,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,752 பேர் பலியாகியுள்ளனர். 30,153 பேர் குண மடைந்துள்ளனர்.