tamilnadu

எம்எல்ஏ-க்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை

சென்னை, ஜன.1 - தமிழக சட்டசபை கூட்ட த்தொடர் வருகிற 5-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை  ஊழியர்கள், பத்திரிகை யாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. இதன்படி ஜன.2-3 தேதிகளில் தலைமைச் செயலகத்திலும், சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. இந்த பரி சோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை  என்பது உறுதி செய்யப் பட்டால்தான் பேரவை மண்டபத்துக்குள் செல்ல முடியும். சட்டசபை 5-ந்தேதி தொடங்க இருப்பதை யொட்டி அங்கு முதல்-அமைச்சர் ஆலோசிக்கும் அறை, எதிர்க்கட்சி தலை வருக்கான அறை, எம்.எல்.ஏ.க்களுக்கான அறை யும் தலைமை செயலகத் தில் புதுப்பிக்கப்பட்டு அந்த  பணியும் முடிவுறும் தருவா யில் உள்ளது. சட்டசபை வளாகமே வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலி வாக்கப்பட்டு வருகிறது.