tamilnadu

கொரோனா அதிகரிப்பு 8 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுதில்லி,டிச.31-  கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தால்  தமிழ்நாடு உள்பட 8 மாநிலங் களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தில்லி, ஹரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், ஜார்க்கண்ட் ஆகிய  8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு  அதிகரித்துள்ளது. இதனால் இந்த மாநி லங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனை களை வழங்கி ஒன்றிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,  தமிழ்நாட்டில் சென்னை, மகாராஷ்டிராவில் மும்பை,  மும்பை புறநகர், புனே, தானே, நாக்பூர், கர்நாடகத்தில் பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொல் கத்தா, ஹரியானாவில் குர்கான் ஆகிய நகரங்களில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பில் திடீர் மற்றும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு  பதிவாகி உள்ளது. உள்ளூர் பயணங்கள், திரு மணங்கள், பண்டிகை கொண்டாட்டங் கள் போன்றவற்றால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தீவிர கண்காணிப்பு தேவை

குளிர்காலம் தொடங்கியுள்ள சூழலில், சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரித்து இருப்பதால் காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். சில மாநிலங்களில் தொற்று அதி கரித்துள்ளது. இரட்டிப்பாக ஆவதற் கான நேரம் குறைந்துள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதையும் அல்லது தாமதமாக கண்டறிவதால் இறப்பு அதிகரிக்கும் சூழ்நிலையை அடையாமல் இருப்பதையும் உறுதி செய்ய முன்கூட்டியே கவனிக்க வேண்டும்.

பரிசோதனைகளை அதிகரித்திடுக! 

மேலே குறிப்பிட்ட மாநிலங்கள், பரி சோதனைகளை அதிகரிக்க உடன டியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் துரித பரிசோத னை ஆகியவற்றுக்கு இடையேயான விகிதத்தை பராமரிக்க வேண்டும். பாதி ப்புக்கு ஆளாவோர் தொடர்புகளை தனி மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பரிசோதனை யும் நடத்த வேண்டும். தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள்படி கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலை யில் வலுப்படுத்த வேண்டும். கொரோனா நிதி ஆதாரங்களை சரியான  முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி  போடுவதில் வேகம் காட்டவேண்டும். கூடுதலான பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். கொரோனா கால கட்டுப் பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.