tamilnadu

“நான்காம் அலை கொரோனா தாக்கம் வெறும் ஊகமே”

ஜூன் 22 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா நான்காம்  அலை உண்டாகும் என்பதை மறுத்துள்ள விஞ்ஞானி கள், அது வெறும் ஊகமே என்று விளக்கியுள்ளனர். இது குறித்து சென்னை ஐஐடி கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் சிதாப்ரா சின்கா “தடுப்பூசிகள் போடுவது அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தற்போது கொரோ னா வெகுவாக குறைந்து வருகிறது.  எனவே எதிர்காலத் தில் புதியதாக ஒரு அலை உருவாகும் என்னும் கணிப்பு சரியாக இருக்காது.  அது வெறும் ஊகமாக மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்தார். ஹரியானா அசோகா பல்கலைக்கழக விஞ்ஞான பேராசிரியர், “பெரும்பாலானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் நான்காம் அலை பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு.  மேலும் துல்லியமான தேதியுடன் வரும் எந்த கணிப்பும் நம்பத்தகுந்தது அல்ல என்றார்.