அலுவலகம் மூடல்
தஞ்சாவூர், ஜூலை 3- தஞ்சாவூர் மேம்பாலம் அருகே இந்து சமய அற நிலையத் துறையின், தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் அலுவலகம் உள்ளது. இதில், மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் தட்டச்சராக பணிபுரிந்து வரு கிறார். இவர் விடுமுறையில் மதுரைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு பணியாற்றும், தலைமை எழுத்தர், அந்த பெண் ஊழியரை, கடந்த வாரத்தில் பணிக்கு வரு ம்படி கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர், “காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளது, என்னால் வேலைக்கு வர முடியாது” எனக் கூறிய நிலையில், வலுக்கட்டாயமாக பணிக்கு வர உத்தரவிட்டுள்ளார். பணிக்கு வந்த பெண்ணிற்கு தொடர் இருமல், தும்மல் இருந்ததால் மீண்டும் மது ரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் 45 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. மற்ற 44 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்ய ப்பட்டது. இதையடுத்து, அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம், வியாழக்கிழமை முதல் வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை மூடப்பட்டது. தற்காலிக மாக அலுவலகம் வேறு எங்கும் மாற்றப்படவில்லை என வும் அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.