சென்னை,ஜன.11- தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா ப ரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாய கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:- தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, யார் எல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், யார் எல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்க ளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோ தனை செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்க ளும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லா விட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான வர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோ தனை செய்ய வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாம லும், அறிகுறிகள் தெரிந்து அல்லது கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் முடிவுற்று எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருந்தால் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ள லாம். கொரோனா சிகிச்சை மையங்க ளில் இருந்தும் வீடு திரும்பலாம். வீட்டு தனிமையை நிறைவு செய்தவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.