tamilnadu

img

குழந்தைகளை துரத்தும் கொரோனா

மதுரை:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1583 ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக   
கொரோனா தொற்று குழந்தைகளை தொடர்ந்து பாதித்து வருகிறது. வியாழன்று சென்னையில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று வயது பெண் குழந்தை மற்றும் 4, 5, 7 வயதுடைய ஆண் குழந்தைகள் மூன்று பேர் என பத்து வயதுக்கு உட்பட்ட நான்கு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 11 வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 12 வயது வயது முதல் 19 வயதுக்குள் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்டோர் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

;