tamilnadu

img

கொரோனா கால நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்...

மதுரை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சங்கத்தின் புரவலர் பிருந்தா காரத் மீது  பாஜக அரசு பதிவுசெய்துள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்,   மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனாகால நிவாரணம் வழங்கவேண்டுமென வலியுறுத்தி மதுரையில் வியாழனன்று  மாவட்டத்துணைத்தலைவர் ஏ. பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி. நாகராஜ், செயலாளர் பி.வீரமணி, துணைச் செயலாளர்  பா.பழனியம்மாள், டி. குமரவேல், தங்கவேலு, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.