மோடி அரசு மீது பிரகாஷ் காரத் சாடல்
போர்ட்பிளேர், ஜன. 16- அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு அளிக்கப்பட்ட அழைப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுத்துவிட்டது என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். அந்தமான் - நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் ஜனவரி 12 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி மற்றும் அந்தமான் நிகோ பார் மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரகாஷ் காரத் கூறியதாவது: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த அழைப்பிதழை நாங்கள் நிரா கரித்திருக்கிறோம், வரவிருக்கும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டு, ராமர் கோவில் திறப்பு விழாவைவும், மதத்தை யும் பாஜக தங்கள் அரசியல் ஆதா யத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அனைவரின் மத நம்பிக்கை களையும் மதிப்பது என்பதும், ஒவ்வொரு வரும் தங்கள் மத நம்பிக்கையைப் பின்பற்றிட இருந்திடும் உரிமையைப் பாதுகாப்பது என்பதுமாகும். அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது என்றும், அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்திட வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத நம்பிக்கையைத் தெரிவு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒன்றிய பாஜக அரசாங்கமும், உத்தரப் பிரதேச ஆதித்யநாத் அரசாங்கமும் அரசியலில் இந்துத்துவா அரசியலை இணைத்து ஆதாயம் அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்எஸ்எஸ்-சும் மத விழாவை, பிரதமரை யும், உத்தரப்பிரதேச முதலமைச்சரையும் மற்றும் அரசு அதிகாரிகளையும் நேரடி யாக ஈடுபடுத்தி, அரசு விழாவாக மாற்றி யிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி எந்தவொரு அரசாங்கமும் எந்தவொரு மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது என்றும், அதுவே ஆட்சியாளர்களின் அடிப்படை விதி யாக இருந்திட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி யிருக்கிறது. இப்போது நாட்டை ஆண்டுவரும் ஒன்றிய பாஜக அரசாங்கமும், உத்தரப்பிரதேச மாநில அரசாங்கமும் அரசமைப்புச் சட்டத்தை மீறியும், உச்சநீதிமன்றத்தின் தீர்வறிக்கைகளை மீறியும் ராமர் கோவில் விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றன. ராமர் கோவில் திறப்பு விழாவில் சனாதன இந்து தர்மத்தைப் பின்பற்றும் நான்கு உயர் ஆன்மீகத் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர்களின் கூற்றுப்படி, இது இந்து சாஸ்திரத்தின்படி நடக்கவில்லை என்கிறார்கள். ராமர் கோவில் முழுமையாகக் கட்டப்படாமலேயே இது நடக் கிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டு கிறார்கள்.
வேலையின்மை தீவிரம்
நாட்டில் வேலையின்மை 26 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருக்கிறது என்றும், இது அந்தோமான் நிகோபார் தீவுகளில் 33 விழுக்காடு அளவு என்றும் குறிப்பிட்டார். வேளாண் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அளிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது. நாட்டிலுள்ள 159 கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் பெற்றிருக்கும் சொத்துக்களைக் காட்டிலும் அதிகமாக வைத்திருக்கின்றனர். அந்தமான்- நிகோபார் தீவுகளில் ஜனநாயக அமைப்பு இதுவரை இல்லாத தால், அரசமைப்புச் சட்டத்தின் கொள்கை இங்கே மறுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி போன்று அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு யூனியன் பிரதேசம் உடனடியாக அமைக்க வேண்டும். பாஜக-வைத் தோற்கடிக்க ‘இந்தியா’ அணி சேர்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தமான் நிகோபார் தொகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொந்த வேட்பாள ரை நிறுத்திடும். வேட்பாளர் பெயர் மாநி லக்குழுவால் பின்னர் தேர்வு செய்யப்படும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.(ந.நி.)