tamilnadu

img

இதயத்துடிப்பு கருவியால் கட்டுப்படுத்தி பிரசவம்: அரசு மருத்துவமனை சாதனை

சென்னை, செப். 23- பிறவியிலேயே இதய  பாதிப்பு உள்ள திருவொற்றி யூரைச் சேர்ந்த மணிமாலா, 24, என்ற கர்ப்பிணி முழு இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்ட நிலை யில், இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தும் கருவி  (பேஸ்மேக்கர்) உதவியு டன் வெற்றிகரமாக பிரசவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தச் சாதனையை சென்னை ராயபுரம் அரசு ஆர் எஸ் ஆர்  எம் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது. அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து இந்த சாதனை  படைக்கப்்பட்டுள்ளது. மணி மாலா அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந் தையை  பிரசவித்தார். இந்த தகவல் அறிந்துமே தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்து வமனைக்குச் சென்று மணி மாலா மற்றும் குழந்தையை யும் கண்டு, மருத்துவக்  குழுவினரைப் பாராட்டி னார். மேலும்,  ரூ.17 லட்சம் செலவில் இடம்பெறும் மின்னிலக்க நுண்கதிர் பரிசோதனைக் கருவி சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.