சென்னை, நவ. 20- ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் திரண்டு போராட வேண்டும் என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கேட்டுக்கொண்டார். பெட்ரோலியம் மற்றும் கேஸ் ஒப்பந்த தொழிலாளர்களின் தென் னிந்திய 5ஆவது மாநாடு சென்னை யில் ஞாயிறன்று (நவ. 20) நடை பெற்றது. மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் கே.விஜயன் தலைமை தாங்கினார். ஐஓசி பாலு வரவேற் றார். மாநாட்டை துவக்கி வைத்து ஜி. சுகுமாறன் பேசியதாவது: தற்போது தொழிலாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண் டிய நிலை உள்ளது. ஒன்றிய அரசு அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும் தனியாரிடம் ஒப்ப டைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. அதிக லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அதிக லாபம் ஈட்டக்கூடிய முதன் மையான நிறுவனங்களில் எண் ணெய் நிறுவனங்களும் உண்டு. எனவே இந்த நிறுவனங்களை ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் நிறு வனங்களிடம் கொடுக்கும் முயற்சி யில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டு கிறது.
கேரளாவில் வழங்கப்படும் ஊதியம் தமிழகத்தில் இல்லை. கேரளாவில் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு 21 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? அங்கு ஆளும் இடது சாரி தொழிலாளர் நல அரசின் தலை யீடு தான். இன்றைய காலகட்டத் தில் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் நினைத்தால் உற்பத்தியை முடக்க முடியாது; ஒப்பந்த தொழி லாளர்களும் நினைத்தால்தான் உற்பத்தி முடங்கும். எனவே நாம் அனைவரும் எண்ணெய் நிறுவன தொழிலாளர்கள் என்ற அடிப்படை யில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். அப்படி போராடினால் மட்டும்தான் ஆட்சியர்களும், நிறு வனங்களும் செவிசாய்க்கும். இவ்வாறு சுகுமாறன் பேசி னார். சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் பி.பாலகோபால், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே.அனில்குமார், கர்நாடக மாநி லச் செயலாளர் ஜி.பாலாஜி, தெலுங் கானா மாநிலச் செயலாளர் பி.மது, ஆந்திர மாநிலச் செயலாளர் ஸ்ரீநிவாசரெட்டி, தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் டி.சேகர், ஜி.விநாயக மூர்த்தி, ராஜலிங்கம் ஆகியோரும் பேசினர்.
தீர்மானங்கள்
எண்ணெய் நிறுவனங்கள் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை களை குறைக்க வேண்டும்; ஒன் றிய அரசு இந்த பொருட்களின் மீது விதிக்கும் கலால் வரியை பெரு மளவு குறைக்க வேண்டும்; பிபி சிஎல், எச்பிசி ஓஎன்ஜிசி, ஐஓசி நிறு வனங்களின் பங்குகளை தனியாரி டம் விற்பனை செய்யக் கூடாது; 9 லட்சம் கோடி ரூபாய் சொத்துக் கள் உள்ள நிறுவனத்தை வெறும் 58 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண் டும்; பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர் களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். சிபிசிஎல் டீசல் பிளாண்டில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற் றும் 114 தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; பிபி சிஎல், எச்பிசி ஓஎன்ஜிசி, ஐஓசி நிறு வனங்களில் பாட்டலிங் பிரிவில் பணியாற்றும் லோடிங் அன்லோ டிங் தொழிலாளர்களை எண் ணெய் நிறுவன தொழிலாளர்களாக அங்கீ கரிக்க வேண்டும்; ஐஓடிஎல், ஐஓசி அவுட்சோர்சிங் பிளாண்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஐஓசி நிறுவன தொழிலாளர் களுக்கு அளிக்கும் சலுகைகளை அளிக்க வேண்டும்; சிபிசிஎல் நிறுவனத்தின் உற் பத்தி பிரிவில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர் களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; ஓய்வு பெறும் நாளன்றே அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழி லாளர்கள் ஓய்வுபெறும் போது ஒப்பந்ததாரர்களை காரணம் காட்டி பணிக்கொடை வழங்கு வதை மறுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.