tamilnadu

img

மாதர் அமைப்புகளுடன் சிறப்புக்கூட்டத்தை நடத்துக!

சட்ட உதவி மையம் வேண்டுகோள்

மதுரை, ஏப்.2-  கல்வி நிறுவனங்களில் தொடரும் இயற்கைக்கு மாறான மரணங்களை தடுப்பதற்கு மாதர் அமைப்புகளுடன் சிறப்புக்கூட்டத்தை முதலமைச்சர் நடத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கல்வி நிறுவனங்களில் தொடரும் இயற்கைக்கு மாறான மரணங்களை தடுப்பது குறித்தும் ஒன்றிய-மாநில  அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும் தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி மன்றத்தின் முன்முயற்சியில் மதுரை சட்ட உதவி மையம் சார்பில் ஏப்ரல் 1 சனிக்கிழமையன்று சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மூட்டா அரங்கில்  நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி  மன்றத்தின் தலைவர் வழக்கறிஞர் உ. நிர்மலாராணி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலத் துணைத் தலைவர் எஸ்.மல்லிகா, மாநி லச் செயலாளர்கள் எஸ்.கே.பொன்னுத்  தாய், ஆர்.சசிகலா , சோக்கோ அறக்  கட்டளையின் வழக்கறிஞர் செல்வ கோமதி உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதில் பள்ளி-கல்லூரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள், ஒன்றிய-மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள், ஓய்வு பெற்ற வர்கள், வாலிபர், மாணவர், மாதர் அமைப்பினர் பங்கேற்றனர்.

இயற்கைக்கு மாறாக  மரணம் நிகழ்ந்தால்...

மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி துவக்கி வைத்து உரையாற்றுகையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக் கும் ஒரு மாணவி செல்போன் பேசும்  போது மாடியிலிருந்து தவறி விழுந் தார். அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலி ருந்தவர்கள் ஓடிச் சென்று அந்த மாண வியை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இது பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி.  கடைசியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி  தற்கொலை செய்து கொண்டார். அப்  போது பத்திரிகைகளில் வெளியான செய்தி வேறு. இயற்கைக்கு மாறான மரணங்களைக் குறைப்பதற்கு தேவை நேர்மையான விசாரணை. ஒருவர்  இயற்கைக்கு மாறாக மரணமடைந் தால், காவல்துறையே அனைத்தையும் விசாரித்து, தற்கொலை என முதலில்  வழக்குப்பதிவு செய்கிறது. இயற் கைக்கு மாறான மரணங்கள் நிகழ்ந்தால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்க வேண்டியவர் கோட்டாட்சியர். அவர்  இடும் உத்தரவுகளின் அடிப்படை யில்தான் காவல்துறை செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த நடை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.  பள்ளி-கல்லூரிகளில் நிகழும் இயற் கைக்கு மாறான மரணங்களைத் தடுப்ப தற்கு பெண்கள் அமைப்புகளை உள்ள டக்கி ஒரு சிறப்புக்கூட்டத்தை தமிழக முதல்வர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்” என்று வலி யுறுத்தினார்.

வழக்கறிஞர் உ.நிர்மலாராணி 

தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி  மன்றத்தின் தலைவர் வழக்கறிஞர் உ. நிர்மலாராணி பேசுகையில்,  தற் கொலை என்பது ஒரு தனிப்பட்ட மாண வர் அல்லது மாணவி எடுக்கக்கூடிய சொந்த முடிவாக பார்க்க முடியாது. இதன் பின்னணியில் சமூக-பொரு ளாதார-அரசியல் காரணங்கள் உள்  ளன. கல்வித்துறையில் அரசு எடுத்  துள்ள கொள்கை முடிவுகள், உதாரண மாக நீட் தேர்வு முறை பல மாணவர் களை விரக்தியின் உச்சத்திற்கு தள்ளி யுள்ளது.இயற்கைக்கு மாறான மர ணங்களில் பாதிக்கப்படுவது மாண வர்கள்-பெற்றோர்கள் மட்டுமல்ல, மாணவ-மாணவிகளை உண்மையி லேயே பாதுகாக்க விரும்பும் கல்வி  நிறுவனங்களும்தான் என்று தெரி வித்தார்.

மாவட்ட - ஒன்றிய அளவில்  கண்காணிப்புக்குழு அமைத்திடுக!

கலந்தாய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் பேசுகையில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சைபர் கிரைம்  குற்றங்களை தடுப்பது குறித்தான பாடங்களை இடம்பெறச்செய்ய வேண்  டும். பள்ளி-கல்லூரிகளில் இயற் கைக்கு மாறான மரணங்கள் நிகழ்வ தைத் தடுக்க மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். பள்ளி-கல்லூரி களில் மனநல ஆலோசகர்கள் உள்ள னரா, பெற்றோர்கள்-மாணவர்களுடன் கலந்துரையாடுவது முறையாக நடை பெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி-கல்லூரிகளில் வைக் கப்பட்டுள்ள புகார் பெட்டிகள் மனநல ஆலோசகர்கள், பெற்றோர்கள் முன்னி லையில் திறக்கப்பட வேண்டும். புகார்கள் இருந்தால் அவர்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். திரைப்படங்களில் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கா னது என்று வாசகங்கள் போடுவது  போல், தற்கொலைக் காட்சிகள் வரும்  போது தற்கொலை முயற்சி தவறா னது என்று வாசகங்களை குறிப்பிட வேண்டும்.  மாணவர்களிடம் மனோதத் துவ முறையில் பேசுவதற்கான பயிற்சி களை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும். பெண்களையும் ஆண் களையும் சமமாக பாவிக்கும் நிலை யினை உண்டாக்க வேண்டும். பெண்  கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். பிற மாண வர்கள் மத்தியில் வைத்து மாணவ, மாணவியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் போக்குகளை தவிர்க்க வேண்  டும் என்று தெரிவித்தனர்.