அமைச்சர்களிடம் விவசாயத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்
சென்னை,ஏப்.29- 100 நாள் வேலைத்திட்டத்தில் காலை 7 மணிக்கு கணக்கெடுப்பை கைவிட வேண்டும். ஏழை குடும் பங்களுக்கான திருமண உதவித் திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் என்று தமிழக அமைச்சர்களிடம் விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். அகில இந்திய விவசாயத் தொ ழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தமிழக வருவாய்த் துறை அமைச்சர், ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அளித்துள்ள மனுவின் விபரம் வருமாறு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் காலை 7 மணிக்கே பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும் பப்பெற வேண்டும், 200 நாள் வேலையும் தினக்கூலி ரூ.600 வழங்கிட ஒன்றிய அரசை வலி யுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஊரக வேலைத் திட்ட நிதியை பொருட்கள் செலவு இனத்திற்காக ஒதுக்கப்படுவதை மாநில அளவில் கணக்கிட்டு அந்த தொகையை எடுத்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட்டு, திட்டத்தின் நிதியை ஊரக வேலைத் திட்டத்திற்கே பயன் படுத்த வேண்டும். ஊரக வேலைத் திட்ட நிதி ரூ.17 கோடியை பயன் படுத்தி 50 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை 48 ஐ திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாடு அரசு அறி வித்துள்ள வேலையின்மைக்கான உதவித்தொகையை எளிமையாக பெறுவதற்கு ராஜஸ்தான் மாநி லத்தில் உள்ளது போல இலவச தொலை பேசி எண் அறிவித்து செயல்படுத்திட வேண்டும்.
வீடற்றவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா
வீட்டுமனையற்ற-வீடற்ற அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க சிறப்புத்திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போரை வரன்முறை செய்து மனைப் பட்டா வழங்கிட வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் மாநில அரசு அறிவித்துள்ள கல்லூரி மாண விருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்ற அறிவிப்பு பெண்களின் உயர்கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்தும் நட வடிக்கையாகும். அதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வரவேற்கிறது.
ஆனால் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் துவங்கி செயல் படுத்தப்பட்டு வரும் திருமண உதவித் திட்டங்கள், கிராமப்புற, நகர்ப்புற, விளிம்புநிலை குடும்பங் களைச் சார்ந்த பெண்களுக்கு திரு மண காலத்தில் பேருதவியாக இருந்தது.கடந்த ஆட்சிக் காலத்தில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக் கான பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவது உள்ளிட்ட திருமண உதவி நிதி பாக்கி இருந் தது. பட்ஜெட் அறிவிப்பில் திரு மண உதவி நிதி திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீடு இல்லை என்ப தும், திருமண உதவித் திட்டங்கள் தொடர்வது குறித்த அறிவிப்பு இல்லை என்பதும் கிராமப்புற நகர்ப்புற ஏழை குடும்பங்களை பெரும் அதிர்ச்சியில் தள்ளி யுள்ளது. ஆகவே திருமண உதவித் திட்டங்கள் தொடர்ந்து செயல் படுத்துவதை தமிழக அரசு உறுதிப் படுத்த வேண்டும். தூய்மை பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சிறப் பாக முன்களப் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.15 ஆயிரத்தை உடனே வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், சமூகநலத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோ ரை ஏப்ரல் 28 வியாழனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற கட்சித் தலைவர் நாகை மாலி, அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் அ.பழநிசாமி, ஏ.டி.கோதண்டன் உள்ளிட்டநிர்வாகிகள் அமைச் சர்களின் இல்லங்களுக்கு நேரடியா கச் சென்று, சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்துப் பேசினர்.