சென்னை, டிச.7- 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு 2022- 2023ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன் றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந் திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒன்றிய சிறுபான்மை விவ கார அமைச்சகத்தின் 29-11-2022 நாளிட்ட கடி தத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டா யமாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற் போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந் தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத் தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியு டையவராகிறார்கள். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப் பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப் படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும் என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு 2008-2009 ஆம் ஆண்டில் சிறு பான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவ னங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத் திற்குக் குறைவாக இருந்தால் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ், 2021-2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு 86.76 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது என்று தனது கடி தத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் இந்த முடிவினால், தமிழ் நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் ஐந்து இலட்சம் ஏழை சிறு பான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை யின் பயன்களைப் பெற இயலாமல் கடுமை யாகப் பாதிக்கப்படுவர். ஏழை மக்கள் தங்க ளுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவியாகும். சிறுபான்மை யினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பதை பல்வேறு காலக் கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. அதோடு, இந்த கல்வி உதவித்தொகை ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உட்பட, மிகவும் விளிம்பு நிலையிலுள்ள மாணவர்கள் தரமான கல்வி யைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருப்ப தால், இது தொடரப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.