tamilnadu

img

நிவாரணம் வழங்கக் கோரி கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி/தூத்துக்குடி, ஜூன் 12- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மா வட்ட ஆட்சியரிடம் சிஐடியு மாவட்ட கட்டுமான தொழி லாளர் நலச் சங்கம் மனு கொ டுத்தது. இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். மோகன், கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்டத் தலை வர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பேரின்பராஜ் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

தொழிலாளர் நல வா ரியத்தில் இருந்து நிவாரணம் அனைத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு மையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டு மான தொழிலாளர் நல வாரி யத்தில் உறுப்பினராக இல்லாத தொழிலாளர்க ளுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். பணி  இல்லாமல் கஷ்டப்ப டும் கட்டுமான தொழிலாளர்க ளுக்கு மாதம் ரூ.7,500 நிவா ரணம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை குறைத்து கட்டு மான பணிகளை அதிகப்ப டுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதுப்பித்தல் பதிவு பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெற்று பணியை துவக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

சிஐடியு கட்டுமானம் மற்றும் ஆட்டோ சங்கம்  சார்பில் எட்டயபுரம் வட்டாட் சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும்.  முறைசாரா  தொழிலாளர்க ளுக்கு புதிப்பித்த-புதிப்பிக் காத அனைவருக்கும் நிவார ணம் வழங்க வேண்டும்.  நிலுவையில் உள்ள எட்டு மாத ஓய்வூதியத்தை தொழி லாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும். தொழிலா ளர் நலச் சட்டங்களை திருத்த  கூடாது. தொழிலாளர் நலவா ரிய அட்டை இல்லாதவர்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்தி எட்டயபுரம் வட்டாட்சியர் அழகு-விடம் மனு கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு ஒருங்கினைப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். அகில இந்தி விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் கு.ரவீந்திரன் வாழ்த்தி பேசி னார். ஆட்டோ சங்க பொரு ளாளர் கண்ணன், கட்டுமான  சங்க நிர்வாகிகள் கிருஷ்ண சாமி, மாரிமுத்து, நடராஜன்,  சிஐடியு பாரதி மில் செய லாளர் முத்தழகு, பொரு ளாளர் மாணிக்கவாசகம், ராமராஜ், பொன்னயைா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.