தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் கிளை மாநாடு ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள தமிழ் இலக்கியா, காலத்திற்கேற்றவாறு விவசாயம் செய்யும் இளைஞர் அசோக், வேலை கேட்டு வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட விஜயகுமார், தயநிதி, வசந்குமார், லோகேஷ், மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ சேவை புரிந்த மருத்துவர் ராமசாமி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசுகளை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு வழங்கி பாராட்டினார்.