tamilnadu

img

கொதிக்கும் வெயிலில் கொள்கை உறுதி: வழி நெடுங்கிலும் வாலிபர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஏப். 24- கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கொள்கை உறுதியோடு 4வது நாளாக ஞாயிறன்று (ஏப்.24) வாலிபர்கள் மேற்கொண்ட சைக்கிள் பிரச்சாரப் பயணத்திற்கு வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என்ற முழக்கத்தோடு சென்னை, புதுச்சேரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 முனைகளிலிருந்து ஏப். 21 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கினர். 4 பிரதான குழுக்கள், 7 துணை பயணக்குழுக்கள் என 3000 கி.மீ பயணம் செய்து மே.1 அன்று  திருச்சியை அடைகின்றன.

சென்னை குழு

சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான சென்னை குழு ஏப்.24 அன்று, காஞ்சிபுரத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட எல்லையான வண்டலூருக்கு வந்தது. அங்கு பயணக்குழு வை சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி  இ.சங்கர், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஆன்ந்தராஜ், செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் தலைமையில் தொழிலாளர்களும், வாலிபர்களும் உற்சாக மாக வரவேற்றனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜீவான ந்தம், செயலாளர் ஜி.புருஷோத்தமன், பொருளாளர் சதீஷ்குமார் ஆகியோர் பயணக் குழுவை மாவட்டத்திற்குள் வழிநடத்திச் சென்றனர். ஊரப்பாக்கத்தில் சிபிஎம் கிளைச்  செயலாளர் மணிவேல் தலைமையிலும், கூடுவாஞ்சேரியில் ஆட்டோ சங்கத் தலைவர் சம்பத் தலைமையிலும் பயணக்குழுவினரை வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மறைமலைநகரில் தொழிற்சங்கத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையிலும், சிங்கப்பெருமாள் கோவிலில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையிலும், செங்கல்பட்டில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தாஸ் தலைமை யிலும் தொழிலாளர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பயணக்குழுவின் நோக்கத்தை விளக்கி மாவட்ட, மாநிலத் தலைவர்கள் உரையாற்றினர்.

புதுச்சேரி குழு

மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையிலான பிரச்சார  பயணக்குழு ஞாயிறன்று(ஏப்.24) காலையில் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்  செயலாளர் கோ.மாதவன் துவக்கி வைத்தார். இந்த குழுவினர் சிதம்பரம் புறவழிச்சாலை, வேளக்குடி, வல்லம்படுகை, வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடைந்தது. இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத்  தலைவர் முத்துகுமரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், செயலாளர் கிருஷ்ணன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் குமரவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழு சார்பில் பட்டாசுகள் வெடித்தும் மேளம் தாளம்  முழுங்க பயணக்குழுவினருக்கு பணமாலை  அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்டச்  செயலாளர் துரைராஜ், ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன் (தரங்கம்பாடி), ரவிச்சந்திரன் (மயிலாடுதுறை), கேசவன் (கொள்ளிடம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில்  உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரியில் கொல்லங்கோடு பகுதியில் இருந்து புறப்பட்டு காவல்கிணறு, நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, விருது நகர், மதுரை வழியாக திருச்சிக்கு செல்லும் சைக்கிள்பேரணி சனிக்கிழமையன்று மாலை கயத்தாறு வந்து சேர்ந்தது. வாலிபர் சங்க மாநில தலைவர் என்.ரெஜிஸ்குமார் தலைமையிலான இப்பயணத்திற்கு கயத்தாறு பகுதியில் சிபிஎம் கயத்தாறு தாலுகா செயலாளர் சாலமன்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள், சீனிபாண்டி யன், தவமணி, ஜெயக்குமார், சுந்தரி, ராமலக்ஷ்மி, செல்வம், ராசையா மற்றும் கயத் தார் வியாபாரிகள் சங்க தலைவர் கொண்டல்  சாமி,   டிஒய்எப்ஐ கயத்தார் நிர்வாகிகள் கலை  செல்வம், செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கயத்தார் ஒன்றியம் சவலப்பேரி கிராமத்தில் உள்ள புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் வீட்டில் அவருடைய பெற்றோர்களை சந்தித்து ரெஜிஸ் நலம் விசாரித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை நாலாட்டின் புத்தூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தூத்துக்குடி மாவட்டகுழு உறுப்பினர் தினேஷ் குமார் தலைமையில் கோவில்பட்டி நோக்கிச் சென்றது. பின்னர் வாலிபர் சங்க தோழர் தியாகி அமல்ராஜ் சொந்த ஊரான கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் தோழர் அமல்ராஜ் படத்திற்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் கிளவிபட்டி பகுதியில் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த  வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் பால முருகன், புறநகர் தலைவர் ஆர்.எஸ்.விக்கி, நிர்வாகிகள் ஜேம்ஸ், பாலா, கண்ணன், ஜான்சன், மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் முத்து காந்தாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் பகுதி வழியாக கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  கே.சீனிவாசன், ரவீந்திரன், கோவில்பட்டி நகர் செயலாளர் ஜோதி பாசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.