tamilnadu

img

மக்களாட்சியில் நம்பிக்கை சியாமரோ காஸ்ட்ரோ உறுதி

தெகுசிகல்பா, ஜன.29- லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசின் முதல் பெண் ஜனாதிபதியாக இடது சாரித் தலைவர்களில் ஒருவ ரான சியாமரோ காஸ்ட்ரோ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மானு வல் செலயாவின் துணைவியா ரும், இடதுசாரிக் கட்சியான லிப் ரேயின் தலைவர்களில் ஒருவரு மான சியாமரோ காஸ்ட்ரோ, நவம்பர் 28, 2021 அன்று நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 51 விழுக்காடு வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வலதுசாரி வேட் பாளர் நஸ்ரி அசபுரா 36 விழுக் காடு வாக்குகளைப்பெற்றார். 1962 ஆம் ஆண்டு ஜனநாயகம் மீட்கப்பட்ட பிறகு முதன்முறை யாக லிபரல் கட்சி அல்லது தேசி யக் கட்சி ஆகிய இரண்டையும் சாராத ஒருவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றுக் கொண்ட பிறகு மக்களி டம் உரையாற்றிய சியாமரோ காஸ்ட்ரோ, “தலைமுறை, தலை முறையாக நமது செல்வம் கொள் ளையடிக்கப்பட்டு வந்துள்ளது. அதற்கு என்னுடைய நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்கும். இத்த கைய கொள்ளை நமது இளைய தலைமுறையினர் மீது கடனை ஏற்றிக் கொண்டே வந்திருக்கிறது.  நாட்டின் மேல்மட்டத்தினர் அனு பவித்துவிட்டு, சுமையை விட்டுச் செல்கிறார்கள். இத்தகைய நிலை இனிமேல் நீடிக்காது” என்று குறிப் பிட்டார். மேலும் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக ஊழல் புரையோ டிப் போயிருக்கிறது. சர்வாதிகார ஆட்சியின் ஆதரவோடு நடத்தப் பட்ட கொள்ளையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியுள்ளது.

நமது இறையாண்மையை உயர்த்திப் பிடிப்பதே தலையாய கடமையாகும். சொந்த நாட்டின் நலனைப் பார்க்காமல், நம் மீது சுமத்தப்பட்டு வந்த மக்கள் விரோ தக் கொள்கைகள் இனிமேலும் நடைமுறையில் இருக்காது. நாங் கள் மக்களாட்சியில் நம்பிக்கை உள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். மக்களால் தேர்வு செய்யப் பட்ட மானுவல் செலயாவின் ஆட்சி யைக் கலகம் செய்து கவிழ்த்த வலதுசாரிகளின் சர்வாதிகார ஆட்சியின் கொள்கைகளால் ஹோண்டுராசில் 74 விழுக்காடு மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். லத்தீன்  அமெரிக்கா நாடுகளிலேயே இங்குதான் இவ்வளவு வறுமை தாண்டவமாடுகிறது. “மிகவும் ஏழ்மையான நாடாக வலதுசாரி கள் மாற்றி விட்டார்கள். அதனால் தான் உயிருக்கே ஆபத்து இருக்கி றது என்று தெரிந்தும் அமெரிக்கா வுக்கும், மெக்சிகோவுக்கும் சட்ட விரோதமாக மக்கள் செல்ல முயல் கிறார்கள்” என்று குற்றம் சாட்டு கிறார் சியாமரோ காஸ்ட்ரோ.