மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர். வி.காசிநாததுரை வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: பரமக்குடியில் பள்ளி மாணவி யை பாலியல் வன்முறைக்கு உட் படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்ப வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட் டக்குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடவடிக்கையையொட்டி ஏராளமான மாணவிகள் - பெண் கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கருத்துக்கள் பரலாகி வருகிறது. இன்னும் சில தனியார் கட்டிடங்க ளில் அரசியல் பிரமுகர் மற்றும் அதி காரிகளே பாலியல் குற்றச்செயல் களில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் பேசப்படுகிறது. எனவே சிலந்தி வலை பின்னலாக மாறிவரும் பரமக்குடி பாலியல் பலாத்காரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தொடர் பாலியல் வன்முறை யில் ஈடுபட்ட உண்மை குற்றவாளி களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதவியில் உள்ள நீதி பதி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண் டும். இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்ச் 6 ஆம் தேதி பரமக்குடி யில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.
இராமநாதபுரம், மார்ச் 4- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்ப லால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்ப வத்தில் அதிமுக கவுன்சிலர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரமக்குடியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள் ளார். இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தனர்.அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கயல்விழி மற்றும் உமா (என்ற) அன்னலெட்சுமி ஆகியோர் தன்னை சில நபர்களிடம் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். உடனடியாக இதுகுறித்து முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு போலீஸ் எஸ்.பி. உத்தர விட்டார் இதைத்தொடர்ந்து காவல் துறை ஆய்வாளர் சுதா தலைமையில் மாணவியிடம் தனி விசாரணை நடத்தி னர். அதில் பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினருமான சிகா மணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது ஆகியோர் தன்னை கடத்திச் சென்று பார்த்திபனூர் அருகே உள்ள தங்கும் விடுதியில் பல முறை கும்பலாக பலாத் காரத்திற்கு ஆளாக்கியதாக தெரி வித்தார் .இதை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட சிகாமணி, புதுமலர் பிரபாகர் ,ராஜா முகமது மற்றும் இதில் ஈடுபட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.