சென்னை, டிச. 29- தேவாலயங்கள் மீதான தாக்கு தல், முஸ்லீம்கள் மீதான வெறுப்பை விதைக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: இந்திய குடியரசு வழங்கியிருக்கிற வழிபாட்டு உரிமைகள் மீது இந்துத்துவா சக்திகளால் நடத்தப்படுகிற தாக்குதல் களை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக் கிறது. இது போன்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான தாக்குதல் களை அரசு நிர்வாகமும், காவல்துறை யும் உரிய முறையில் தலையிட்டு சிறுபான்மை மக்களும், அவர்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற இந்து மத தலைவர்கள் கூட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அறைகூவல் மிக வும் ஆபத்தானதாகும்.
கிறித்தவர்கள், முஸ்லீம்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் தொடுக்க வேண்டும் எனவும், மதம் மாற்றுபவர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்களை தாக்கி அச்சப்படுத்த வேண்டும் எனவும் விடுக் கப்பட்ட அறைகூவல் இந்தியா முழுவதும் மத துவேசத்தை கிளப்பி பெரும் கலவரத்திற்கான திட்டமிட்ட அறிவிப்பாகும். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும், அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்க்கி றது. இதன் தொடர்ச்சியாக ஹரி யானா, உத்திரப்பிரதேசம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்க ளில் கிறிஸ்துமஸ் கால கொண்டாட்ட ங்களின் போதும் நேரடி தாக்குதல்க ளில் இந்துத்துவா சக்திகள் ஈடுபட்டுள்ள னர். உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சான்டா கிளாஸ் உருவப் பொம்மையை எரித்தும், அரியானா மாநிலம் அம்பாலாவில் 143 ஆண்டு கால பழமையான புனித ரெடிமீர் தேவாலயத்தை அடித்து நொறுக்கிய தோடு ஏசு நாதர் சிலையும் உடைக்கப் பட்டுள்ளது.
அசாம் மாநிலம் சில்சாரில் கிறிஸ்துமஸ் பிராத்தனை கூட்டத்தில் ஈடுபட்டோரை அடித்து விரட்டியுள்ளனர். இதுபோல் பல்வேறு இடங்களில் ஏசு கிறிஸ்து வின் சிலைகளையும், வழிபாட்டுத் தளங்களையும் அடித்து நொறுக்கி யுள்ளனர். 2021ஆம் ஆண்டு ஜனவரி யில் இருந்து தற்போது வரை நானூறுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தில்லிக்கு அருகாமையில் இருக்கிற குர்கான் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துகிற இடத்தை சிதைத்து, வழிபாட்டை தடை செய்தனர். வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிசத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் நடத்தி வருகின்றன.
மேற்கண்ட தாக்குதல்கள் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் அரசின் ஆதரவோடு நிகழ்த்தப்பட்டு வருவது மிகவும் கண்ட னத்திற்குரியது. அரசு அதிகாரத்தை ஒன்றியத்திலும், மாநிலத்திலும் வைத்திருக்கிற பாஜக அரசியலமைப்பு சட்டத்தின் வழிநின்று இது போன்ற தேச விரோத சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வேடிக்கை பார்ப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. சிறுபான்மை மக்கள் மீதும், அவர்க ளின் வழிபாட்டு தளங்கள் மீதும் நடத்தப் படுகிற தாக்குதல்களை தடுத்து நிறுத்து வதற்கு ஒன்றிய பாஜக அரசு உடனடி யாக முன் வர வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள் கிறது. மேற்கண்ட தாக்குதல்களி லிருந்து சிறுபான்மை மக்களை பாது காப்பதற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுதியேற்கிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் மேற்கண்ட தாக்குதல்களை கண்டித்து குரல் எழுப்ப முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.