சென்னை, ஜூலை 19 - ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களில் வேலைநிறுத்தம் செய் வதற்கான அறிவிப்பை செவ்வா யன்று (ஜூலை 19) மேலாண் இயக்குநர் களிடம் சிஐடியு வழங்கியது. தமிழகத்தில் உள்ள 8 போக்கு வரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். 6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலை யில், இந்த வேலைநிறுத்த அறிவிப்பை சிஐடியு வழங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்புஆபிரகாமிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை, துணைப்பொதுச் செயலாளர் எம்.ரவி சங்கர் உள்ளிட்டோர் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கினர். அதில், ஆகஸ்ட் 3 அன்று அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயி னார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு இழப்பு ஏற்படும் என தெரிந்தும் 10000க்கும் மேற்பட்ட கிராமப்புற, நகர்ப்புற வழித்தடங் களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கிறது. தினமும் சுமார் ஒன்றே முக் கால் கோடி மக்கள்பயணிக்கின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 3000 வழித்தட பேருந்துகள்நிறுத்தப் பட்டன. பயணிகளின் எண்ணிக்கை யைக் குறைத்து போக்குவரத்துக் கழ கங்களை அழிக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டது. ஒன்றிய பாஜக அரசு மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்தி போக்குவரத்துக் கழகங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. மக்கள் சேவைக்காக கிராமப்புற வழித்தடங்களில் இயங்கும் பேருந்து களுக்கு அரசு எவ்வித உதவியும் செய் யாமல் தொழிலாளர்களின் பணத்தை வைத்து கழகங்களை இயக்கும் மோச மான நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபட்டது. மேலும் தொழிலாளர்கள் ஊதியத்தை குறைப்பது போன்ற நட வடிக்கையில் ஈடுபட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் கொடுமைகள் செய்தது.
போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க வரவுக்கும், செலவுக்கு மான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர் களைப்போல் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் ஊதிய விகிதம் வழங்கி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உடன் ஓய்வுக் கால பலன்கள் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, அதிமுக ஆட்சியில் தொடர் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்றது.
சட்டமன்றத்தேர்தல் அறிவிப்பு வெளியான 2021 பிப்ரவரி 26ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெற்று கொண்டிருந்தது. தேர்தல் அறிவிப்பை யொட்டி, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் களின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப் பட்டது. திமுக அரசு வந்தவுடன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என தொழிலாளர்கள் ஆவலு டன் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்சி க்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியும் தீரவில்லை. போக்குவரத்து துறையில் அதிமுக ஆட்சியில் நடந்த தவறான நடவடிக்கைகள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து நீடிக்கிறது. போக்குவரத்து ஊழியர் களின் கோரிக்கைக்காக ஆத ரவு கரம் நீட்டிய திமுகவின் ஆட்சியில், அதிமுக ஆட்சி கால அவலங்கள் நீடிப்பது சரியற்றது. எனவே தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்க ளைப் பாதுகாக்கவும், மேம் படுத்தவும், வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண் டும். தொழிலாளர்கள் பணத்தை வைத்து கழகங்களை நடத்தக் கூடாது. மற்ற துறை ஊழியர் களைப்போல் பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய ஒப் பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற ஊழி யர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுக்கால பலன் கள், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கழகங்களி லும் வேலை நிறுத்த அறி விப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக காத்தி ருந்தும் நியாயங்கள் மறுக் கப்பட்டதாலேயே வேலை நிறுத்த அறிவிப்பை சிஐடியு வழங்கியுள்ளது. ஊழியர் களது கோரிக்கைகளில் தீர்வு கண்டு, வேலைநிறுத்தத்தை அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.