சென்னை, ஜூலை 20 - அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலை வரும் தீக்கதிர் முன்னாள் உதவி ஆசிரியருமான தோழர் வி.என்.ஆர் என்கிற வி.என்.ராகவன் (வயது 92) உடல் புதனன்று (ஜூலை 20) தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் ஜூலை 18 அன்று தோழர் விஎன்ஆர் உயிரிழந்தார். தபால்துறை ஊழியர் சங்கத்தின் முன்னணி ஊழியராகவும், தீக்கதிர் உதவி ஆசிரியராக 9 ஆண்டுகளும் பணியாற்றிய விஎன்ஆர், சிறந்த மொழி பெயர்ப்பாளராவார். அன்னாரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் இருந்து நுங்கம்பாக்கம் மயா னத்திற்கு கொண்டு வரப் பட்டது. அங்கு வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா தலைமை யில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய பி.சம்பத், “தன்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். குடும்பத்தின் நலனை கட்சி நலனுக்காக பொருத்தமாக இணைத் தார். கட்சிக்கு மாறுபட்ட கருத்துக்களை கிளையில் தீவிரமாக விவாதிப்பார்.
தனது ஆற்றல் முழு வதையும் கட்சியின் நலனுக்கு பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மிகப்பெரும் பங்காற்றினார். ‘நள்ளிரவில் சுதந்திரம்’’ நூலை தமிழில் எழுதப் பட்டது போன்றே மொழி பெயர்த்திருந்தார். ஒரு மகத்தான தோழரை நாம் இழந்துள்ளோம் என்றார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், சர்வே சன், வி.தனலட்சுமி, ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி, வங்கி ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.வி.வேணுகோபாலன், அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் சிவகுரு, முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரம், தீக்க திர் சென்னை பதிப்பு பொறுப்பாசிரியர் அ.விஜய குமார், தலைமை செய்தியா ளர் சி.ஸ்ரீராமுலு, பொறுப்பு பொதுமேலாளர் உஷா, ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் வர்ஷா உள்ளிட்டோ ரும் வி.என்.ஆர் குடும்பத்தி னரும் அஞ்சலி செலுத்தி னர். வி.என்.ஆர்.உடலுக்கு மூத்த மகன் பாலாஜி தீ மூட்டினார்.