சென்னை, அக். 27 - சிஐடியு மாநில மாநாட்டையொட்டி வியாழனன்று (அக்.27) சென்னையி லிருந்து தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர் புறப்பட்டது. சிஐடியு 15 வது மாநில மாநாடு நவ. 4-6 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடை பெறுகிறது. இதனையொட்டி மாநாட்டிற்கு, பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து சிஐடியு முன்னோடி களின் நினைவுச்சுடர் கொண்டு வரப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை ஓட்டேரி மயானத்தில் உள்ள தோழர் வி.பி.சிந்தன் நினைவிடத்திலிருந்து, நினைவுச்சுடர் கொண்டு செல்லப்படு கிறது. இந்த நினைவுச்சுடர் பயணத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமையில் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் நினைவுச்சுடரை கொடுக்க, மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்டச் செயலா ளர்கள் சி.திருவேட்டை (மத்திய சென்னை), லெனின்சுந்தர் (வட சென்னை), தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஏ.நடராஜன், மூத்த தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயணக்குழு மத்திய சென்னையில் 6 மையங்களி லும், தென்சென்னையில் 5 மையங்களி லும் பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து வடசென்னை, திரு வள்ளூர், வேலூர் வழியாக பயணக் குழு நாகர்கோவிலை சென்றடைகிறது.