தோழர் வி.பி.சிந்தன் நினைவுதின ரத்ததான முகாம்
எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு
புதுக்கோட்டை, மே 25- தெரழிலாளர் வர்க்கத்தின் மகத் தான தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் ரத்ததான் முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்ற வளா கத்தில் நடைபெற்ற ரத்ததான முகா மிற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா தலைமை வகித் தார். ரத்ததான முகாமை தொடங்கி வைத்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, ஆர்.மணிமாறன், க. ரெத்தினவேல், வி. சரவணன், ஆர். மணிமாறன், என். ராஜா உள்ளிட்டோர் பேசினர். முன்ன தாக நகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான் வரவேற்க, ஏ. முகமதுகனி நன்றி கூறினார். முகாமில் ரத்தவங்கி அலுவலர் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கவுரவிக்கப் பட்டனர். முகாமில் 32 தொழிலாளர்கள் 32 யூனிட் ரத்தத்தை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கினர். அவருக்கு சங்கத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.