tamilnadu

img

தோழர் சங்கரய்யா பாராட்டிய புதினம் ‘உஷ்ணராசி’ ஒரு நவீன இதிகாசம் - வே.மீனாட்சிசுந்தரம்

உஷ்ணராசி (புதினம்)
மலையாள மூலம் : 
கே.வி.மோகன்குமார் விலை ரூ.750
தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ 
வெளியீடு: வம்சிபுக்ஸ்

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் கேரள மண்ணில் நடந்த வர்க்கப்போரை மெய்நிகர் காட்சிகளாக சித்தரிக்கிறது உஷ்ணராசி புதினம். மலையாள மூலம் கே.வி.மோகன்குமார். தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ என்ற அறிவிப்பு முகப்பில் இல்லையென்றால், இது ஒரு மொழி பெயர்ப்பு புதினம் என்று உணரவே முடியாது.

புதினத்திற்குள் வரலாற்றை அறிவியல் பார்வையோடு உணர்த்தும் பதிவுகளை புது மையாக புகுத்தியுள்ளது உஷ்ணராசியின் சிறப்பு. பொதுவாக வரலாற்று நாயகர்களை கதாபாத்திரங்களாக்கித்தான் வரலாற்று நாவல்கள் எழுதப்படுகின்றன. கல்கி, அகிலன், சாண்டில்யன் நா.பார்த்தசாரதி போன்றோர் எழுதிய நாவல்கள் இந்த வகையே. ஆனால் இந்த உஷ்ணராசியில் கதாபாத்திரங்கள் வர லாற்று நாயகர்களை தேடி கண்டுபிடித்து நட மாட விடுகிறார்கள். சில உரையாடல்கள் ஹைக்கூ கவிதைபோல் நெஞ்சை தொடு கின்றன. அதிலும் இன்றைய அன்றாட அரசியல் சமூக நிகழ்வோடு உள்ள தொடர்போடு பேசு கிறது. சுருக்கமாக வரலாற்றுப் பொருள் முதல் படி மாற்றப் பார்வையோடு படைக்கப்பட்ட புதினமாகும். 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்தது. 1778-ல் இருந்து இந்தியாவை பிரிட் டிஷ் ஆட்சியாளர்கள் நேரடியாகவும், கப்பம் கட்டும் மன்னர்களின் உதவியோடும் நடத்திய ஆட்சிக்கு முடிவுகட்டும் விடுதலை இயக்கம் தீவிர மடைந்தது. முன்னைவிட கம்யூ னிஸ்ட்களின் களப்பணியால் நம்பிக்கை யோடு விவசாயிகள் வீறு கொண்டு எழுந்த னர். திருவாங்கூர் சமஸ்தானத்தில் அன்று திவா னாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயரின் வர்ணா ஸ்ரம தர்ம பரிபாலனத்தில் தீண்டாமைக்கு சபிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை கம்யூ னிஸ்டுகள் திரட்டினர். சனாதனதர்ம ஒடுக்கு முறைகளை எதிர்க்க அம்மக்களை போராட வைத்தனர். அதில் புன்னப்புரா - வயலார் பகுதி போராட்டகளமாக இருந்தது. திவானின் துப் பாக்கி ஏந்திய காவல்படை தாக்குதலிலிருந்து மக்களை காக்க கம்பு அருவாள் தவிர வேறு ஆயுதமில்லாத இளம்வயதினர் குழு கொரில்லா முறையில் போராடதயாரிக்கப்பட்டனர். உஷ்ணராசி அதனை படம்பிடிக்கிறது.

“இரண்டாம் விசில் கேட்டவுடன், கவுந்து படுத்து முன்னால் இழைத்தப்படியே நகரனும், தலையை தூக்கிபார்க்க கூடாது. ஒரு பக்கமாக ஒருக்களித்து தரையோட தரையாக ஒட்டிப் படுக்கணும், பட்டாளம் ஒரு ரவுண்டு முடிச்சிட்டு துப்பாக்கி குண்டுகளை நெறைக்கும். அந்த நேரம் பார்த்து குதிச்செழறதும் குத்தறதும் ஒண்ணாவே நடக்கணும்”. அந்த வீரமிகு இதி காசத்தை இந்தப் புதினம் வாசிப்போர் மனத் திரையில் ஓடவிடுகிறது. புதினத்தின் தொடக்கமே கேரளத்திலும் இந்தியாவின் இதரபகுதிகளிலும் 1945-57 நடந்த வர்க்கப் போருக்கும் இன்று நடக்கும் வர்க்கப்போருக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு வரியில் உணர்த்துகிறது. “தோழருக்கு இப்போது கைமுஷ்டியை தூக்கி முழக்கமிட மட்டும் தானே தெரியும். இப்போதைய புதிய விளையாட்டு கார்ப்பரேட்டுகளுடனும் மாஃபியாக்களுடனும்ன்றது ஞாபகமிருக்கட் டும் (பக்கம் 19). அன்றைய நிலையை, “கள்ளச் சந்தையும் பதுக்கலும் தலைவிரித்தாடின. தின்று கொழுத்து தினவெடுத்த ஜமீன்களின் நெல்குதிர்களில் பெருச்சாளிகள் பெற்றுப் பெருகின. எண்ணெய் வற்றி இருள் சூழ்ந்த குடிசைகளில் மரணம் வலை விரித்தது” என்று விவரிக்கிறது.

40 தலைப்புகளில் எழுதப்பட்டவைகளில் தேசிய சர்வதேச வர்க்கப்போராட்ட நிகழ்வு களை ஒரு வரியில் கூறி வாசகனைத் தேட வைக்கிறது. அன்று தடைகளையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து போரிடும் நிலைமை நிலவியதால் அவசியமான கட்சி அமைப்பு பற்றி யும் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் செயல்படுவதற்கு ஏற்ற கட்ட மைப்பு பற்றியும் விவாதிக்கத் தூண்டுகிறது. விடுதலைக்குப்பிறகும் செயல்பட உரிமை கிடைத்தும் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிச சமத்துவ அரசியல் கருத் துக்கள் பரவாமல் தடுக்க உருவாகும் தடை களைப் பற்றி பேசுகிறது. 1959-ல் நேரு அரசு மிருனாள் சென் இயக்கிய “நீல் ஆகாஷ் நீச்சே” என்ற சினிமாவைத் தடை செய்தது. விடுதலை பெற்ற பிறகு முதன் முதலாக தடை செய்யப்பட்ட படமாகும் அது. (யு டியூபில் இன்று பார்க்கமுடியும்). “அடி கொடுத்துதான் தீண்டாமை அகற்றப்பட்டது” என்ற வரலாறு படிந்து கிடக்கிறது (பக்கம் 99). விழிப்புணர்வு ஏற்பட்டால் உழைக்கும் மக்களின் செயல் எப்படி மாறும் என்பதை குஞ்சுண்ணி தாத்தா உணர்த்துகிறார்.

வாக்கப் போராட்ட நாயகர்களை தேடிப் போகிற கதாபாத்திரங்களின் ஆளுமைகள் பெண்களாக இருப்பதுநாள் இந்த நாவலின் இன்னொரு சிறப்பாகும். கதாபாத்திரங்கள் கற்பனையேயானாலும் இன்றைய துணிச்சல் மிகு பெண் கர்னலிஸ்ட்டுகளின் சாயலில் படைத்திருப்பது. கதாசிரியரின் எதார்த்தவாத அணுகுமுறையைக் காட்டுகிறது. அப ராஜிதா. திசா இந்த கதாபாத்திரங்கள் இன் றைய துணிச்சலான பெண் நீருபர்களின் சாத னைகளை மனத்திரையில் ஓடவைக்கிறது. குஜராத்கோப்புகள் என்று மோடி முதலமைச்ச ராக இருந்தபொழுது நடந்த கொரேங்களைத் தேடித் தொகுத்த ரானா அயூப்.

காஷ்மீர் போட்டோ ஜர்னலிஸ்ட் மஸ்ரட் சாகரா, தமிழக ஜெயராணி (வயர்) இந்துத்துவா வெறியர்களால் கொல்லப்பட்ட கர்நாடகா கவு ரிலங்கேஷ் இத்தகையோரின் துணிச்சலை உலகமே பாராட்டுவதைக் காண்கிறோம். இந்த இரு கதாபாத்திரங்களும் பேச்சுவாக்கில் குறிப்பிடுகிற கவிதைகள். புத்தகங்கள் மிரு கம்பாதி மனிதம்பாதி என்று உலாவும் இரண்டு கால் பிராணிகளையும் முழு மனிதனாக்கும் உள்ளடக்கம் கொண்டவை. புள்ளி விவரங் களை வைத்து மானுடத்தை கயநல பிராணி யாக மாற்றுகிற இன்றையச் சூழலில் மானு டத்தை முழு மனிதமாக்கும் பெண்மையை போற்றும் கடமை இலக்கியத்திற்குண்டு என் பதை இந்த புதினம் உணர்த்துகிறது.

மக்களறிந்த நாவலாசிரியர் எஸ். இராம கிருஷ்ணன் நாவல்களின் கட்டமைப்பு பற்றி குறிப்பிடுகையில் 2-ம் நூற்றாண்டு நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. இது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்று சேர்ந்த முயற்சி. அதாவது நாவல் ஒரு இசைக் கோர்வையைப் போலத் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட - தளங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். இந்த நாவலைப் படித்த பிறகு அவைகளோடு அறிவியல் மற்றும் வர லாற்றுப் படி மாற்ற அரசியல் தளங்களையும் சேர்த்து எழுதும் புதினங்களே வாசகர்களை ஈர்க்கும் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஐய மிருந்தால் நாவலின் 39வது பகுதியாக வரும் பொலேனியம் 210-ஐ படிக்கவும். கொரில்லா யுத்தம் பற்றிய குறிப்புகளில், வெற்றி அடைந்த வியட்நாம் விவசாயிகளின் கொரில்லா போர்முறை பற்றி இந்தப் புதினம் பேசாதது குறையாகப்பட்டது. இதைப் படித்து முடித்த வுடன் பாம்பு கடித்து மறைந்த கேரள முன்னோடி கம்யூனிஸ்ட் கிருஷ்ணபிள்ளை. பொலிவிய காட்டில் சுடப்பட்ட சேகுவேரா, சத்தீஸ்கர் காட்டில் குண்டடிபட்டு இறந்துகிடக்கும் மாவோ யிஸ்ட்களில் சே முகமொத்த இளைஞன் - இவர்களது முகங்கள் மனத்திரையில் ஓடும், சோசலிசக் குடியரசை அமைக்க குருதி சிந்தி யவர்கள் பற்றி அறிய மேலும் தூண்டும். கார்க்கி யின் தாய். ரஷ்ய மக்களை உசுப்பிவிட்டது போல் இதுவும் பசித்திருக்கத் தள்ளப்பட்ட வனை அரசியலில் விழித்திருக்க உசுப்பி விடும்.