tamilnadu

img

தோழர் நந்தினி காலமானார்

கரூர், ஜன.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு முன்னாள் உறுப்பின ரும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளருமான தோழர் நந்தினி உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந் தார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில்  திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு, சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோசிமின், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அ.காதர்பாட்சா, நடராஜன் உள்ளிட்ட பலர் நந்தினியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர்.  கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்  குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் தொலைபேசி மூலம் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.