சென்னை,ஜன.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரரு மான தோழர் என். சங்கரய்யா அவர்கள் பூரண குண மடைந்து ஜனவரி 22 சனிக்கிழமையன்று வீடு திரும்பினார். தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு சிகிச்சை யளிப்பதற்கு மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து உத்தரவிட்டதுடன் தொடர்ந்து உடல்நிலை குறித்து மருத்து வக் குழுவினரிடம் விசாரித்ததுடன், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் என். சங்கரய்யாவை நேரில் சென்று பார்வையிட்டு உடல் நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், சிறந்த முறையில் சிகிச்சைய ளிப்பதற்கு ஏற்பாடு செய்த சென்னை, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் அவர்களுக்கும், அவரது தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரப்பணி யாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.