தோழர் என். ராஜகோபால் படத்திறப்பு
திருச்சிராப்பள்ளி, ஜுன், 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டக்குழு முன்னாள் செயலாளர் மறைந்த தோழர் என். ராஜகோபால் படத்திறப்பு நிகழ்ச்சி, கட்சி உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் அகில இந்திய மாநாடு முடிவுகள் விளக்க பேரவைக் கூட்டம் ஞாயிறன்று கட்சி அலுவலகத்தில் வட்டச் செயலாளர் என். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தோழர் ராஜகோபால் படத்தை மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். பின்னர், அகில இந்திய மாநாடு முடிவுகளை விளக்கிப் பேசினார். இதையடுத்து கட்சி உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சிதம்பரம், பி.தியாகராஜன், மணப்பாறை, மருங்காபுரி வட்டக்குழு உறுப்பினர்கள், கட்சியின் கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், தோழர் ராஜகோபால் துணைவியார், மகள், மருமகன் மற்றும் குடும்பத்தினர்கள் புகழஞ்சலி செலுத்தினர். வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.