tamilnadu

img

தோழர் ம.மீ.ஜெயிலான் நினைவு 10ஆம் ஆண்டு ரத்ததான முகாம்

தோழர் ம.மீ.ஜெயிலான் நினைவு 10ஆம் ஆண்டு ரத்ததான முகாம்

தோழர் ம.மீ.ஜெயிலான் நினைவு 10ஆம் ஆண்டு ரத்ததானமுகாம் சென்னை மாதவரம் எங்க வாப்பா வீட்டில் ஞாயிறன்று (ஏப்.15) நடைபெற்றது.  ஸ்டான்லி அரசு மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில் சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாதவரம் 3வது மண்டலத்தலைவர் எஸ்.நந்தகோபால், மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன், கல்வியாளர் பிரின்ஸ்கஜேந்திரபாபு, சிபிஇயூ தலைவர் எஸ்.வைத்திலிங்கம், பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன், பொருளாளர் பி.சத்தியமுருகன், ஹரிஹரன் வேர் அவுஸ் மேலாளர் எச்.ஜெகன்நாதன், வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் எல்.பி.சரவணன், பேராசிரியர்கள் ஜே.அமிர்தலெனின், ஜி.ரவீந்திரன், சிபிஎம் மாதவரம் பகுதிச்செயலாளர் கமலநாதன், திருவொற்றியூர் பகுதிசெயலாளர் ஆர்.கருணாநிதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டத்தலைவர் எம்.ராஜ்குமார்,  செயலாளர் வி.ஜானகிராமன், டியூஜெ சென்னை மாவட்டத்தலைவர் தேவேந்திரன், பொருளாளர் அப்சர்பாஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உடல் தானம் செய்ய விரும்புவோருக்கு விண்ணப்பப் படிவமும் வழங்கப்பட்டது. நிறைவாக தீக்கதிர் உதவிஆசிரியர் ம.மீ.ஜாபர் நன்றி கூறினார்.