இன்று தோழர் ஜோதிபாசு நினைவு நாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர், கோடிக்கணக்கான வங்க மொழி பேசும் மக்களின் ஆதர்சன நாயகன் தோழர் ஜோதிபாசு. 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் மகனாக பிறந்தார். கல்கத்தா ராஜதானி கல்லூரியில் சேர்ந்து ஆங்கில இலக்கி யத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். படிக்கும் போது தேச விடுதலைப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். சுபாஷ் சந்திர போஸின் கூட்டத்திற்கு சென்ற அவர் அங்கே போலீஸ் நடத்திய தடியடியில் சிக்கி படுகாயமுற்றார். அதன் பின் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டன் சென்றார். அங்கே கல்லூரியில் படிக்கும் போது அங்கு செயல்பட்ட இந்தியா லீக் என்ற தேசபக்த மாணவர் அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது. பி.கே.கிருஷ்ணமேனன் தலைமையில் செயல்பட்ட அந்த அமைப்பில் ஜோதிபாசு சேர்ந்து கொண்டார். அதேபோல் இங்கிலாந்தில் இருந்து இயங்கிய இடதுசாரி அமைப்பான லண்டன் மஜ்ஜில் என்ற அமைப்பில் சேர்ந்து அதன் செயலாளரானார். அப்போது அங்கு வந்த ஜவஹர்லால் நேரு விற்கு கிருஷ்ணமேனன் ஜோதிபாசுவை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்து பிற்காலத்தில் இந்தியாவின் பிரபல அரசியல் தலைவ ராக மாறிய இந்திரஜித் குப்தா, நிகில் சக்கரவர்த்தி, மோகன் குமாரமங்கலம், பார்வதி, பூபேஷ் குப்தா போன்ற கம்யூ னிஸ்ட் மாணவர்களோடு நெருக்கமான நட்பு கொண்டார். இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர்களான ஹாரி பாலிட், ரஜினி பாமிதத், பென் பிராட்லி ஆகியோர் நடத்திய தத்துவார்த்த அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டார். 1939ஆம் ஆண்டு தனது வழக்கறிஞர் தேர்வை எழுதி முடித்து 1940ல் கல்கத்தா வந்தார். அங்கே பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் முசாபர் அகமதுவை சந்தித்து பேசினார். 1942 இல் கம்யூனிஸ்ட் கட்சி மீது இருந்த தடை நீங்கிய பிறகு பகிரங்க மாக செயல்படத் துவங்கினார். கட்சித் தலைமை அவரை ரயில்வே தொழிற்சங்க கட்டும் பணியை செய்ய பணிந்தது. அதை ஏற்று கடுமையாக உழைத்து சங்கத்தை உருவாக்கி அதன் செயலாளராக பொறுப்பேற்றார். 1946 இல் வங்கத்தில் பயங்கர மத கலவரம் மூண்டபோது கல்கத்தா வந்த மகாத்மா காந்தியுடன் விவாதித்து வங்கம் முழுவதும் அமைதிக் குழுக்களை உரு வாக்கினார்.
1948 இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தோழர் ஜோதிபாசு பல தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். 1951ல் தான் விடுதலை ஆனார். 1952 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் பரா நகர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 1971 வரை அதே தொகுதியில் வென்றார். சட்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி குழுவின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். 1967 மற்றும் 69 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராக செயல்பட்டார். 1962ல் இந்திய - சீனா எல்லைப் போரை ஒட்டி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பிறகு விடுதலையானார். 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் 9 பேரில் ஒருவராக (நவரத்தினங்களில் ஒருவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று சிறப்பு வெற்றி பெற்றது. தோழர் ஜோதிபாசு முதலமைச்சரானார். தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆட்சி நடத்தி சாதனை படைத்தார். அவரது அரசு நில சீர்திருத்தத்தை அமல்படுத்தி லட்சக் கணக்கான மக்களுக்கு நிலம் வழங்கியது. இது, நாட்டிற்கே இன்றைக்கும் வழிகாட்டும் மாபெரும் சாதனையாகும். 2009 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அவர் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டார். - ஆர்.ராஜா, சிபிஎம் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர்