வேலூர், ஜன.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழரும், திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்கு நருமான தோழர் ஜூடோ கே.கே.ரத்தி னம் உடல் சனிக்கிழமை (ஜன.28) அவ ரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய் யப்பட்டது. முன்னதாக குடியாத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுட லுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாநில செயற்குழு உறுப் பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம், மாநில கட்டுப் பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தர ராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, வேலூர் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் என்.காசி நாதன், வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், ப.சக்திவேல்,கே.சாமிநாதன், செ.ஏகலைவன், கே.ஜே. சீனிவாசன், சிபிஐ மாவட்டச் செய லாளர் ஜி.லதா, மாவட்ட துணைச் செயலாளர் துரை.செல்வம், திமுக மாவட்டச் செயலாளரும் அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார்,
வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, குடி யாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றிய தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய செய லாளர் கள்ளூர் கே.ரவி, அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கொண்டசமுத்திரம் ராமு, குடியாத் தம் நகர்மன்ற துணைத்தலைவர் க. பூங்கொடி மூர்த்தி, காங்கிரஸ் வழக்கறிஞர் மோகன்ராஜ் திராவிடர் கழகம் மண்டலத்தலைவர் சட கோபன், விசிக குருவி கணேசன், பாமக ஜி.கே.ரவி, இந்திய குடியரசு கட்சியின் தலித் குமார், தமுமுக நிஜா முதீன், வேலூர் மாவட்ட நாடக நடிகர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. சதீஷ்குமார், பாஜக நகரச் செயலாளர் ஞானம் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு குடியாத்தம் நகரச் செய லாளர் பி.காத்தவராயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலா ளர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் முன்னிலை வகித்த னர். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தரராஜன், சிபிஎம் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, திமுக மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் மாயா பாஸ்கர் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தோழர் ஜூடோ ரத்தினம் உடல் தரணம்பேட்டையிலிருந்து ஊர்வல மாகக் கொண்டுசெல்லப்பட்டு சுண்ணாம்பு பேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.