தூத்துக்குடி, டிச.18- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தூத்துக் குடி மாவட்ட முன்னாள் செயற் குழு உறுப்பினரும், சிஐடியு முன்னாள் மாவட்டச் செய லாளருமான தோழர் தி. குமாரவேல் காலமானார். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்ல நாயக்கன்பட்டி கிரா மத்தை சேர்ந்த திருவேங்கட கிருஷ்ணன் - ஆறுமுகத்தம் மாள் தம்பதியருக்கு மக னாக 10.4.1950 ல் பிறந்தவர் தோழர் தி.குமாரவேல். 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்த காலம் முதல் சிஐடியு தொழிற்சங்க பணிகளிலும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி யிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். 1992 ஆம் ஆண்டு சிபிஎம் தூத்துக் குடி மாவட்ட செயற்குழு உறுப்பினராக தேர்வு செய் யப்பட்டார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவராக வும், சிஐடியு தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் 2005 முதல் 2015 வரை திறம் பட செயல்பட்டார். மின்வாரிய பணியிலிருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளில் ஓய்வு பெற்று பின்னர் கட்சி, தொழிற்சங்க பணி களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மாநாடு வரை மாவட்டக்குழுவில் இருந்து செயல்பட்டார். பின்பு கட்சி யின் மாவட்டக்குழு அலுவல கத்தில் அலுவலக பணிகளில் தற்போது வரை தன்னை முழுமையாக ஈடுபட்டு வந் தார். தோழருக்கு மனைவி ஆறுமுகம், மகள்கள் ஜீவா, பூரணி, மகன் மாரிமுத்து ஆகி யோர் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனும திக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு அவ்வப் போது சென்று அவரை கவ னித்து வந்தார்கள். இந்நிலை யில் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி காலை 5.45 மணி அள வில் சிகிச்சை பலனின்றி கால மானார்.
தலைவர்கள் அஞ்சலி
அவரது மறைவுச் செய்தி யறிந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேக ரன், மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், பொருளாளர் எம். வெங்க டேசன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். சுப்பிர மணியன், பொறியாளர் அமைப் பின் பொதுச் செயலாளர் கே. அருட்செல்வன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிஐடியு மாநிலக் குழு இரங்கல் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தி: ஒன்றுபட்ட திருநெல் வேலி மாவட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க பணிகளில் குறிப்பாக மின்சார ஊழியர் சங்கத்தில் தன்னை ஈடு படுத்தி கொண்டவர். தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவராகவும், சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செய லாளராகவும் மாநிலக் குழு உறுப்பினராகவும் செயல் பட்ட தோழர் தி.குமாரவேல், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரி ழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படத்தியது. அன்னாருக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு சார் பில் அஞ்சலி செலுத்துகிறோம். தோழரது மறைவால் வாடும் மனைவி ஆறுமுகம், மகள்கள் ஜீவா, பூரணி, மகன் மாரிமுத்து ஆகியோருக் கும், தோழர்களுக்கும் ஆறு தல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி
இறுதி நிகழ்ச்சி டிசம்பர் 19ல் காலை 10 மணி அள வில் மட்டக்கடை அய்யலு சந்துவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள் ளது. இதில் சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முக மது, க.கனகராஜ், மின் ஊழி யர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந் திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் கே.பி.பெருமாள், பி. பூமயில், மாவட்டச் செயலா ளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், சிபிஎம், சிஐ டியு நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொள்கின்ற னர். குமாரவேல் மறைவு செய்தி அறிந்து கட்சியின் மத் தியக்குழு உறுப்பினர்கள் பி. சண்முகம், ஆர்.கருமலை யான் ஆகியோர் தொலை பேசி மூலம் இரங்கல் தெரி வித்தனர்.