சென்னை, ஜன. 19- இந்தியன் வங்கியின் முன்னாள் பொதுச்செயலா ளர் தோழர் அ.ரங்கராஜன் (70) வியாழனன்று (ஜன. 19) காலமானார். 1985ஆம் ஆண்டு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு உதயமானது. அந்த சங்கத்தில் 1990 முதல் 2009 வரை 19 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தியவர். தனது இறுதிமூச்சு வரை சம்மேளனத்தின் ஆலோசக ராக இருந்து வழிகாட்டிய வர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிச இயக்கத் தோடும், தொழிற்சங்க இயக் கத்தோடும் தன்னை பிணைத்துக் கொண்டு தோழர் ரங்கராஜன் பணி யாற்றினார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ள னர். அவரது உடல் வெள்ளிக் கிழமை (ஜன. 20) 6 இ, பிரைம் ரோஸ் பிளாக், சிப்ரோஸ் கார்டன், ஆற்காடு சாலை சென்னை விருகம்பாக்கம் என்ற முகவரியில் அஞ்சலிக் காக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக் கப்படுகிறது. பிறகு மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நெசப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் நடைபெறு கிறது.