தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை/மதுரை, ஜூன் 17- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்கு களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்ட நூல கங்களைச் சேர்ந்த நூலகர்களுக்கு நூல்களையும், புத்தக அடுக்குகளை யும் வழங்கினார். இப்புத்தக தொகுப்புகளில் மொத்தம் 13,000 புத்தகங்கள் அடங்கும். போட்டித் தேர்வுகளுக்காக நகர்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதி யை ஏற்படுத்தி தரும் நோக்கத்துடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து இப்பணியை நிறைவேற்றியுள் ளார். இந்த நிகழ்வில், தலைமைச் செயல கத்திலிருந்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், மதுரையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்பு மிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், டி.நாக ராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் காலோன், நூலகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மதுரை நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜய ராஜன், எஸ். பாலா ஆகியோர் சல்வை அணிவித்து கௌரவித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை மைய நூலகத்தின் சாதனை
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேச னின் தொகுதி மேம்பாட்டு நிதி பங்களிப்பு குறித்து மாவட்ட மைய நூலகர் யசோதா விடம் நமது நிருபர் பேசியபோது, “மதுரை மாவட்ட நூலகத்திற்கு தினம் தோறும் சுமார் 300 முதல் 400 பேர் வருகை தருவர். இதில் குறைந்தது 100 பேராவது போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள். காலை எட்டு மணிக்கு வருகை தரும் போட்டித் தேர்வர்கள் இரவு எட்டு மணி வரை இங்கேயே முழு நாளும் தங்கியிருந்து தங்களை தயார்ப்படுத்துகின்றனர். ஏற்கனவே மாநில அரசு புத்தகங்கள் கொடுத்துள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகமும் போட்டித் தேர்வர்களுக்கான புத்தகங்களை வழங்கியுள்ளது. இப்போது மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும் ஒரு புத்தகத் தொகுப்பை வழங்கியுள்ளார். இது மாணவர்களின் தேர்ச்சிக்கு பேரூதவியாக இருக்கும். இதன் மூலம் மாவட்ட மைய நூலகத்தை பயன்படுத்தும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். மதுரை மாவட்ட மைய நூலகத்தில் தயாராகுபவர்களில் இதுவரை குறைந்தது 100 பேராவது வெற்றி பெற்று அரசுப் பணிகளுக்குச் சென்றிருப்பார்கள். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயருவதற்கு இதுபோன்ற பங்களிப்புகள் உதவியாக இருக்கும் என்றார். தவிர மாவட்டத்தில் காலை, மாலை இரு நேரம் இயங்கும் நூலகங்கள் உள்ளன. ஒரு நூலகத்திற்கு போட்டித் தேர்விற்கு தயா ராகிக் கொண்டிருப்பவர்கள் குறைந்தது 20 பேராவது வருகிறார்கள் என்றார்.
இன்னும் தேவை... இன்னும் தேவை
போட்டித் தேர்விற்கு தயாராகும் மாண வர்களிடம் சிலரிடம் பேசியபோது, மதுரை மக்களவை உறுப்பினரின் இந்த முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், “பாராட்டுதலுக்குரிய இந்த உதவியோடு அவர் மற்றொரு உதவியையும் மாணவ-மாணவிகளுக்கு செய்ய வேண்டும். வினா- விடை தொகுப்பு பற்றி தினம் தோறும் குறைந்தது 50 செய்திகளை நாங்கள் பதி விறக்கம் செய்து பயன்பெறும் வகையில் அவர் உதவ வேண்டும்” என்றனர்.